tamilnadu

img

குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

தஞ்சாவூர் நவ.4- குடிமனைப் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்றது.  தஞ்சை மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம் திருச்சென்னம்பூண்டியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு, நடைபெற்ற போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட துணை செயலா ளர் பி.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி விளக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஏ.சந்திரா, ஒன்றி யத் தலைவர் பி.ஆயிராசு, ஒன்றியக்குழு  ஆற்காடு அலமேலு, ஏ.அன்னலட்சுமி, ஆர்.பவானி, ஜெயந்தி, ஜீவிதா, ஜி.காந்திமதி, எம்.அகிலா, எம்.மாங்கனி, ஆர்.சாந்தி, ஆர்.சுதா, பி.சங்கி லியம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவ சாமி, சம்சுதீன், உதயகுமார் கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து 240 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, செவ்வாய்க் கிழமையிலிருந்து ஆய்வுப் பணியை துவக்குவதாகவும், அதன் அடிப்படை யில் அனைவருக்கும் குடி மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர்.

;