தஞ்சாவூர் ஆக.17- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டையொட்டி, தஞ்சை மாவட்டம் இராயமுண்டான்பட்டி தியாகி என்.வி.நினைவகத்தில் தியாகி என்.வெங்கடாசலம் நினைவுச் சுடர் பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சுடர் பயணத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தொடங்கி வைத்தார். கொடி பயணக் குழு தலைவர் கே.அபிமன்னன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.