தஞ்சாவூர், டிச.22- சேதுபாவாசத்திரம் வட்டா ரத்தில் குடிமராமத்துப் பணிகள் நிறைவடைந்தும் நிலுவைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்ப தாக விவசாயிகள் குற்றம் சாட்டி யுள்ளனர். தஞ்சை மாவட்டம், சேதுபாவா சத்திரம் கடைமடைப் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பருவ மழை சரிவரப் பெய்யாததால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் அடி யோடு பாதிக்கப்பட்டிருந்தது. இதே போல் தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது தவிர ஆடு, மாடு கள் குடிக்க தண்ணீர் இல்லாததால் செத்துமடியும் நிலையும் ஏற்பட் டது. இதையடுத்து நீராதாரத்தை பெருக்கும் வகையில் தமிழக அரசு கடந்த மே மாதம் குடிமராமத்துப் பணியை மேற்கொண்டது. இந்தப் பணி ஒப்பந்த அடிப்படை யிலும், விவசாயிகள் தங்களது சொந்தப் பணத்தை முதலில் செலவு செய்து குடிமராமத்துப் பணியை செய்து முடித்த பின்னர் அதற்குப் பிறகு செலவு செய்த தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொள் ளும் வகையில் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய தாலுகா வுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஏரி, குளங்கள் குடிமரா மத்து பணி மூலம் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. இதில் ஆண்டிக்காடு பகுதியில் உள்ள கழனியாகுளம் ஏரி மூலமாக இப் பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றதுடன், இந்த ஆண்டிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏழு வரு டமாக இந்த ஏரி தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மண்டி வறண்டு போய் கிடந்தது. இதனால் இப்பகு தியில் உள்ள 200 ஏக்கர் விளை நிலங்கள் ஒரு போக சாகுபடி கூடச் செய்ய முடியாத நிலையில் கிடந் தது. இதையடுத்து ஆண்டிக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 47 சிறு குறு விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி இந்த குடி மராமத்து பணி திட்டத்தின் வாயி லாக கழனியாகுளம் ஏரியை மரா மத்து செய்ய துவங்கினர். இந்த வகையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி துவக்கப் பட்ட இந்த பணி ஆகஸ்ட் மாதம் இறுதியில் நிறைவடைந்தது. மரா மத்து பணிகள் துவங்குவதற்கு முன் னர் கரையின் அகலம் ஒன்றரை மீட்டர் ஆகவும், உயரம் ஒரு மீட்டர் ஆகவும் இருந்து வந்தது. மரா மத்து பணிகள் செய்து முடிக்கப் பட்ட நிலையில் தற்போது அகலம் 4 மீட்டர் உயரம், 5 மீட்டர் அள விலும் மராமத்து பணி செய்யப் பட்டது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மழை சரிவர பெய்யாமல் இருந்ததால் இப்பகுதியில் நிலத் தடி நீர் வெகுவாக குறைந்து 170 அடிக்கு மேல் இருந்ததோடு அது வும் உப்பு தன்மை கொண்டதாக இருந்து வந்தது. தற்போது மரா மத்து பணி செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இந்த ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டி யது. இதனால் இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர் வெகு வாக உயர்ந்து தற்போது 5 அடி தூரத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இது தவிர இந்த தண்ணீரும் உப்புத் தன்மை இல்லாமல் நல்ல தன்மை யுள்ள தண்ணீராக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ளவுக்கு விவசாயிகள் நீர் ஆதா ரத்தை பெருக்க இந்த கழனியா குளம் ஏரியை கடன் வாங்கி மரா மத்து பணியை மேற்கொண்டனர். இதற்காக விவசாயிகள் செலவு செய்த தொகை 63 லட்சம் எனவும் தற்போது அரசிடமிருந்து 37 லட்சம் மட்டும் வந்து சேர்ந்ததாகவும் மீத முள்ள பணம் தரப்படாமல் இழுத்த டிக்கப்படுவதாகவும் இப்பகுதி விவ சாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது மட்டுமல்லாமல், இதே போல பட்டுக்கோட்டை மற்றும் பேராவூ ரணி ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் செலவு செய்து குடிமராமத்து பணியை மேற்கொண்ட நிலையில் இன்னும் அரசிடமிருந்து நிலுவைத் தொகை வரவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் இருந்து வருகிறது. இதுபற்றி மல்லிப்பட்டினம் விவ சாயி நாகூர் கனி மற்றும் விவசாயி கள் கூறுகையில், “கடந்த 7 வருட காலமாக நீர்நிலைகள் வறண்டு போய் இருந்ததால் எங்களால் விவ சாயம் செய்ய முடியவில்லை. மேலும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற் பட்டு குடிக்க கூட தண்ணீர் இல்லா மல் அவதிப்பட்டோம். இந்நிலையில் தமிழக அரசின் குடிமராமத்து பணி திட்டத்தின் படி நாங்கள் ஒன்று சேர்ந்து கடன் வாங்கி செலவு செய்து மராமத்து பணியை முடித்து விட்டோம். பணி முடிவ டைந்து பாதி தொகை வந்து விட்ட நிலையில் மீதம் உள்ள தொகை 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை இத னால் நாங்கள் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்த தொகை என்ப தால் வட்டி கட்ட முடியாமல் தவிக்கி றோம். எனவே விவசாயிகளின் நிலை கருதி நிலுவைத் தொகையை உட னடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வறண்டு போயி ருந்த இந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும், செலவு செய்த தொகை இன்னும் வரவில்லையே என்ற கவலை எங்களை வாட்டுகிறது” என் றனர்.