கும்பகோணம், ஜூன் 14 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தை அடுத்த சோழபுரம் விளந்த கண்டத்தில் நடந்த சாதி ஆணவப் படு கொலையை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கும்பகோணம் அருகே உள்ள விளந்தகண்டம் அய்யா காலனியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் பொழுது திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சரண்யா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்தும், சரண்யாவின் அண்ணன் மைத்துனர் ரஞ்சித்தை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததை யடுத்து, சரண்யா காதலித்தவரை திரு மணம் செய்து கொண்டார். இந்நிலை யில் சரண்யாவின் அண்ணன், காதல் தம்பதிகளை விருந்துக்கு அழைத்து, வீட்டிற்கு வந்த காதல் தம்பதியை, கொடூரமாக அரிவாளால் வெட்டி இருவரையும் படுகொலை செய்தனர். குற்றவாளிகளான சக்திவேலும் ரஞ்சித்தும் தேடப்பட்டு வந்த நிலை யில், திருவிடைமருதூர் காவல்நிலை யத்தில் சரண் அடைந்தனர். இது குறித்து கொலை நடந்த இடத்தை தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா கந்தபுனேனி, சரண்யாவின் தாய் தேன் மொழியிடம் விசாரணை நடத்தினார். இப்படுகொலையைக் கண்டி த்து கும்பகோணம் அரசு மருத்துவ மனையின் எதிரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை.பாண்டியன் தலை மை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு மாநில தலைவர் செல்லக்கண்ணு, மாநி லக் குழு உறுப்பினர்கள் சிவகுரு, கலைச்செல்வி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவ பாரதி, நாகராஜன், மாநகரச் செய லாளர் செந்தில்குமார், ஒன்றியச் செய லாளர் இயேசுதாஸ், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் டி.ஆர். லோக நாதன், விசிக மண்டல செயலாளர் விவேகானந்தன், திக நிம்மதி, மதிமுக ஸ்டாலின், நீல புலி இயக்க நிறுவனர் இளங்கோவன், குடந்தை ஜாஃபர் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஈடுபட்டனர். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றிட வேண்டும். கொலை செய்யப்பட்ட திருவண்ணா மலையைச் சேர்ந்த மோகன் குடும்பத் திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும். சாதி ஆணவப் படுகொலையில் ஈடுபடுகிற எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தா லும் உரிய முறையில் தண்டனை கிடைத் திட உடனடியாக சாதி ஆணவக் கொலை தடுப்பு சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.