tamilnadu

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கும்பகோணம், ஏப்.25-தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அழகாபுத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் கூலித்தொழிலாளியான ராமனும்(24) கடந்த3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்ட ராமன், தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். அச்சிறுமி, ராமனை திருமணம் செய்து வைக்க கோரி கும்பகோணம் அனைத்து பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், 17 வயது சிறுமியை ஆசை காட்டி மோசம் செய்த குற்றவாளி ராமன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்துகைது செய்தனர்.

;