தஞ்சாவூர் ஆக.29-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு கல்லூரி முதல்வர் சி.ராணி தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் எம்.ராமலிங்கம் முகாமைத் தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர்கள் ரேவதி, விஜயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ராஜ்மோகன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் என்.பழனிவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வா ளர்கள் பாம்பன், சதீஷ், வட்டார மருந்தாளுநர் ரஹீம், ஆய்வக நுட்பநர் சுரேஷ் கலந்து கொண்டனர். முகாமில் 40 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.