தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ரூ.1.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணி யன் கூறுகையில், தமிழ் வளர்ச்சித் துறை 2019-20 அறி விப்புகளின் வழி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும் உதவிடும் வகையில் 15 பேராசிரியர்கள்- இலக்கிய ஆளுமைகளை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் பேராசிரியர்களாக அழைப்பதற்கு ஆண்டொன்றுக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலைத் தமிழ் மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைத் தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தி உதவிடும் வகையில் 45 மாணவர்களுக்குத் மாதந்தோறும் ரூ.2,000 கல்வி உத வித்தொகை வழங்க ஆண்டொன்றுக்கு ரூ.39.60 லட்சமும், பிஜி மற்றும் பிரிட்டிஷ் கயான நாட்டில் உள்ள தமிழ் ஆசிரி யர்களுக்கும், மாணவர்களுக்கும் இலக்கிய இலக்கணம், பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி அளிக்க நல்கையாக ரூ.30 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக நூலகத்திற்கு வெளி மின்ன மைப்புப் பணிகளுக்கு நல்கையாக ரூ.30 லட்சமும் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ1 கோடியே 53 லட்சத்தினை தமி ழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு, பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அக்னி ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதிக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 20- நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்று அக்னி ஆற்றில் மணல் அள்ளு வதற்கு தடை விதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பாசன விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் முகப்பு மண்டபத்தில் அக்னி ஆறு படுகை பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சிற்றம்பலம், உப்புவிடுதி, புனல்வாசல், ஒட்டங்காடு, கட்டயங்காடு,வலசக்காடு, ஈச்சன்விடுதி, செருவாவிடுதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சங்கத்தின் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உற்பத்தியாகும் அக்னி ஆறு எனும் காட்டாறு, பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. சுமார் 200 கிமீ தொலைவை கடந்து வரும் இந்த காட்டாறு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நீர்பிடிப்பு ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆற்றில் கடந்த பல வருடங்களாக மிகப் பெரிய அளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள்அனைத்தும் தற்சமயம் வறண்டு போக தொடங்கி விட்டன. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதியில் முக்கனி பாலம் என்றும் 42 கண்பாலம் என்றும் அழைக்கப்படும் பாலம் உள்ளது. ஈச்சன்விடுதி வழியாக கிழக்கு பகுதி நோக்கி செல்லும் அக்னி ஆற்றில், வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் வகை யில், காட்டாற்றில் 42 பில்லர்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக புதுப்பட்டினம் மெயின் வாய்க்காலும் அதன் ஒரு பகுதியில் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதியுடன் கூடிய வகையில் பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டு உள்ளது. காவிரி நீர் கல்லணை கால்வாய் வழியாக திறக்கப்படும் போது இந்த பாலத்தில் வழியாக செல்லும் புதுப்பட்டினம் மெயின் வாய்க்கால், திருச்சிற்றம்பலம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடை மடை பாசன பகுதிகளை சென்றடைகிறது. தற்சமயம், ஈச்சன்விடுதி பாலத்தின் அருகிலேயே மணல் திருட்டு நடைபெறுவதால் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த யூஜின்பிரபு(35) என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இடையாத்தி பகுதியில் இருந்து ராஜாமடம் வரை மணல் அள்ளுவதற்கு கனரக வாகனங்களுக்கு தடை விதித்ததுடன் சில நிபந்தனைகளையும் விதித்து கடந்த 29.10.2018 அன்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தற்சமயம் அக்னி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசு மணல் அள்ளு வதற்கு உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
கரூர், ஜூலை 20- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தபாளையத்தைச் சேர்ந்தவர் கமலாம்பாள்(60). இவர் வெள்ளிக்கிழமை வீட்டின் வெளியே நின்றிருந்த போது அங்கு இருசக்கர மோட்டார் வாக னத்தில் வந்த டிப்டாப் இளைஞன், மூதாட்டியிடம் விலாசம் கேட்பது போல் நடித்து அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பினான். இதுகுறித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.