அதிராம்பட்டினம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
தஞ்சாவூர், ஆக.7- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகை தீன் கல்லூரி வணிகவியல், வணிக ஆட்சியல் மற்றும் பொருளாதாரத் துறைகள் சார்பில், “வணிகத்துறையில் நிகழும் சவால்கள், இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு குறித்து ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் எம்.முக மது முகைதீன் வரவேற்றார். கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர் பி.கணபதி அறிமுக உரையாற்றினார். கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஏ.முகமது நாசர் தொடக்க உரை நிகழ்த்தினார். இதில் 200-க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், 40-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறப்பு விருந்தினராக எத்தியோப்பியா ஆம்போ பல்க லைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மை துறை பேராசி ரியர் எஸ்.நக்கீரன் கருத்துரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் மாணிக்க வாசகம் நிறைவுரையாற்றினார்.
வருமான வரியிலிருந்து விலக்கு ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஆக.7- தென்பகுதி ரயில்வே பென்சனர்ஸ் 37-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பொது மகா சபை கூட்டம் புதனன்று பொன்மலை ரயில்வே திருமண மண்டபத்தில் நடை பெற்றது. சங்க தலைவர் கோபாலன் தலைமை வகித்தார். ஆண்ட றிக்கையை செயலாளர் ராமசுவாமி வாசித்தார். வரவு -செலவு அறிக்கையை பொருளாளர் மகேந்திரன் சமர்ப்பித்தார். கூட்டத்தில் 7-வது சம்பள கமிஷன் சிபாரிசின் படி வழங்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18000-த்திலி ருந்து ரூ.26000 ஆகவும், குறைந்தபட்ச பென்சனை ரூ.13000 ஆகவும் திருத்தி அமைக்க வேண்டும். பென்சனர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஈமசடங்கிற்காக ஒருமாத பென்சனுக்கு இணையான தொகை வழங்க வேண்டும். ரயில்வே பென்சன் பெறும் முதியோர்களுக்கு தங்கும் விடுதி களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் அரசே நிறுவி அதனை நடத்திட வேண்டும். தமிழக அரசு வழங்கி வரும் சமூக பாது காப்பு திட்டத்தை போல் மத்திய அரசு பென்சனர்களுக்கும் உதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து பென்ச னர்களுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. செயல் தலைவர் கணேஷ் நன்றி கூறினார்.