tamilnadu

தஞ்சாவூர், புதுக்கோட்டை , திருவாரூர் செய்திகள்

இன்ஜின் பழுதால் தாமதமாக இயக்கப்பட்ட பயணிகள் ரயில்கள்
தஞ்சாவூர், ஆக.1-நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு பயணி கள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் தஞ்சாவூர் அருகே திட்டை- பசுபதிகோவில் ரயில்நிலையங்களுக்கு இடையே இன்ஜின் பழுதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இத னால் மயிலாடுதுறை- தஞ்சாவூர் பயணிகள் ரயில் பண்டார வடையிலும், மயிலாடுதுறை- திருச்சி விரைவு ரயில் கும்ப கோணம் ரயில் நிலையத்திலும், திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப் பட்டது. பின்னர், திருச்சியிலிருந்து மாற்று இன்ஜின் வர வழைக்கப்பட்டு, பழுதான ரயில் இன்ஜினோடு பொறுத்தி அதன் பின்னர் ரயில் இயக்கப்பட்டது. இதனால் சுமார் இரண்டரை மணி நேரங்கள் நான்கு ரயில்களும் காலதாமத மாக இயக்கப்பட்டதால், அந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தடகள விளையாட்டு வீரர்கள் தேர்வு  
புதுக்கோட்டை, ஆக.1-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதுக்கோட்டை மாவட்ட பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடகள விளையாட்டிற்கான விளையாட்டுத் வீரர்கள் தேர்வு கள் 2-ம் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெறவுள்ளது.  10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் (மாணவர் மற்றும் மாணவரல்லாதோர்) கலந்து கொள்ள லாம். தேர்வு செய்யப்படும் 10 சிறுவர் மற்றும் 10 சிறுமி யர்களுக்கு அவர்களது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் ஆகஸ்ட் 2019 முதல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கம், புதுக்கோட்டை என்ற முகவரியிலும், 74017-03498 என்ற அலைபேசி எண்ணி லும் தொடர்பு கொண்டு பயனடையலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
 

கூட்டுப் பண்ணையப் பயிற்சி 
அறந்தாங்கி, ஆக.1-அறந்தாங்கி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மூக்குடி கிராமத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் பயிற்சி நடைபெற்றது.  வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.சொர்ண பாரதி தலைமை வகித்தார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் இரா மகேந்திரன் வரவேற்று பேசினார் 40 விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனர். புதுக்கோட்டை வேளாண் வணி கத் துறை அலுவலர் த.சுபத்ரா, வேளாண் அலுவலர் (தரக் கட்டுபாடு) முகம்மது ரபீக் பேசினர். மாவட்ட வேளாண் துணை இயக்குநர் உழவர் பயிற்சி மன்றம் பெரியசாமி குழு உறுப்பினர்களுக்கு வங்கி புத்தகங்களை வழங்கி பேசி னார். வேளாண் துணை அலுவலர் பாண்டி முருகன், வீ.கவி யரசன் ஆனந்த்ராஜ் மூக்குடி விவசாயி சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக தோட்டகலைத் துறை துணை அலுவலர் வெற்றியப்பன் நன்றி கூறினார்.


விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அறந்தாங்கி, ஆக.1-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், கோட்டாட் சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் குணசேகர் தலைமை யில் புதன் காலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. கோட்டாச்சியரின் நேர்முக உதவியாளர் ஆவுடை யார் கோவில் தாசில்தார் ஜமுனா அறந்தாங்கி, மண மேல்குடி துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்பட்டது பயிர் காப்பீடு தொகை இதுவரை கிடைக்காத விவசாயி களுக்கு தொகை உடன் கிடைக்க உரிய ஆவணம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் 
குடவாசல், ஆக.1-திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திற னாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது. முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் 6 முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத் திறனாளி குழந்தை கள் கலந்துக் கொள்ளலாம்.  மேலும் தகுதியுடைய மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்படும் என வட்டார மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அலு வலர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.