tamilnadu

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் முக்கிய செய்திகள்

கும்பகோணத்தில் சாதி ஆணவ செயல்  பச்சிளம் குழந்தையை கொல்ல முயற்சி

கும்பகோணம், ஆக.8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் சீனிவாச புரம் புதுகாலனி தெருவைச் சேர்ந்தவர் சரண்யா(22). இவர் அதே தெருவைச் சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து வந்தார். இரு வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர் என்றாலும் சாதி உட்பிரிவு வெவ்வேறு. இதனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் சரண்யாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்து வந்தனர்.  இந்நிலையில் காதலித்த கார்த்தியோடு கடந்த 2018 மார்ச் மாதம் சரண்யா திரு மணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரண்யாவின் பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்ததால் ஜூலை மாதம் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் தெரிவித்தார். காவல் நிலைய ஆய்வாளர் சரண்யாவின் பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் தற்காலிகமாக நாச்சியார் கோவிலில் உள்ள தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் 2019 ஜூலை மாதம் 31-ம் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந் தது. பின்னர் மருத்துவமனையிலிருந்து ஆக.5-ம் தேதி தனது கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மீண்டும் சரண்யாவின் பெற்றோர், சரண்யாவையும் அவரது கண வரையும் மிரட்டி, பிறந்த குழந்தையை மண்ணை அள்ளிப் போட்டு கொலை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் சரண்யா புகார் செய்ததன், அடிப்படையில் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சீர்காழி, ஆக.8- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான எருக்கூர் நவீன அரிசி ஆலையிலிருந்து அரிசி வழங்கப்பட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளில் 60 நியாய விலைக் கடை களுக்கும் சீர்காழி ஒன்றியத்தைச் சேர்ந்த 38 ஊராட்சிகளில் உள்ள 70 நியாய விலை கடைகளுக்கும் மேலும் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிகளை சேர்ந்த 10 மீனவர்கள் அங்காடிகளுக்கும் எருக்கூர் நவீன அரிசி ஆலையிலிருந்து அரிசி அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது.  இதில் ஒவ்வொரு ரேசன் கடைக்கும் முதல் ரக அரிசி என்று சொல்லப்படும் நீள மான அரிசியையும், பொது ரகம் என்று சொல்லப்படும் குண்டு அரிசியையும் 50-க்கு 50 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அனைத்து ரேசன் கடைகளுக்கும் முதல் ரக அரிசி விகிதம் குறைந்தும், பொது ரக மான குண்டரிசியின் அளவு விகிதத்தை அதி கரித்தும் எருக்கூர் நவீன அரிசி அலை அதி காரிகள் வழங்கி வருகின்றனர்.  தரம் குறைந்தது என்று கூறி குண்டு அரிசி யை குடும்ப அட்டைதாரர்கள் வாங்க மறுப்ப தால், ரேசன் கடைகளில் விற்பனையாள ருக்கும் அட்டைதாரர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது. இதனால் விற்பனை யாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர்.  இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் நுகர்வோர் குழுவின் உறுப்பி னருமான தேவேந்திரன் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்திற்கு சொந்தமான மற்ற நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேசன் கடைகளுக்கு உரிய விகிதத்தில் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் எருக்கூர் குடோனிலிருந்து மட்டும் தரமற்ற அரிசி வழங்குகிறார்கள். இலவச அரிசி வழங்குவதில் இங்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே தரமான அரிசி யை அனைத்து ரேசன் கடைகளுக்கும் வழங்க வேண்டும்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்க இணை பதிவா ளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சங்கம் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரேசன் பொருட்கள் வாங்க அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்  சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 திருவாரூர், ஆக.8- அண்மைக் காலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பொருட்கள் வாங்க மக்கள் அலைக் கழிக்கப்படுகிறார்கள். மண்ணெண்ணெய் உரிய அளவு வழங்கப்படுவதில்லை. அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்கப்படுவதில்லை.  தமிழக அரசின் இந்த போக்கைக் கண் டித்தும் ரேசன் கடை விநியோக குளறுபடி களை சரி செய்யக் கோரியும் திருவாரூர் ஒன்றியத்தில் ரேசன் கடைகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தப்பளாம்புலியூர், காரியாங்குடி ரேசன் கடை முன்பு கிளைச் செயலாளர் கஜேந்தி ரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பி னர் எஸ்.சேகர், மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.செல்வி, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுப்பத்தூரில் கிளைச் செயலாளர் ஏ. அமிர்தலிங்கம், மாங்குடி வடகரையில் கிளைச் செயலாளர் முருகையன், துரைக் குடியில் கிளைச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், புதூரில் கிளைச் செயலாளர்கள் எஸ்.ஏ. பக்கிரிசாமி, கணேசன் ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் சுர்ஜித், சிபிஎம் மூத்த உறுப்பினர் கே.வடுகநாதன், மாதர் சங்க மூத்த தலை வர் நாச்சியம்மாள் உள்ளிட்டோர் உரை யாற்றினர். 500-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இளைஞர்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.8-  இளைஞர்கள் நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் ஒருங்கி ணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இளை ஞர்கள் இணைந்து தூர்வாரும் பெரியகுளத்தை புதன்கிழமை மாலை பார்வையிட்ட பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் இளைஞர் மற்றும் விவசாயிகளை பாராட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், “தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட இளை ஞர்கள் தாமாகவே முன்வந்து நீர்நிலைகளை தூர்வாரி வருகின்றனர். இந்த இளைஞர்கள் தமிழ கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளனர். இதை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள், விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும். தமிழக அரசு வீடுகளில் மழைநீர் சேமிப்புகளை ஏற்படுத்த வேண்டும், என சொல்கிறது. ஆனால் கிராமங்களில் குடிசை வீடுகளில் வாழும் மக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை எவ்வாறு செய்ய முடியும். எனவே, நீர் நிலைகளை சீரமைத்து அதில் தண்ணீர் தேங்கி வைக்க நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.  அரசு கடந்த 25 ஆண்டு கால மாக தூர்வாரும் பணியை செய்யாமல் விட்டு விட்டது. தமிழக அரசு நீர் மேலாண்மை பற்றிய விவ ரங்களை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்” என்றார்.