தடுப்புக் காவலில் 5 பேர் கைது
தஞ்சாவூர் அக்.26- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(30), விவசாயி. இவர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, உதார மங்கலத்தை சேர்ந்த மணிகண்டன்(24), அஜித்குமார்(23), ஆனந்த்(28), பிரேம்குமார்(28), சிலம்பரசன்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 பேரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்துடன் குமரி இணைந்த தினம் நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை
நாகர்கோவில், அக்.26- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வட நேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு ள்ளதாவது: கன்னியா குமரி மாவட்டம் தாய்த்தமி ழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று குமரி மாவ ட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்க ப்பட்டுள்ளது. இந்த விடுமு றைக்கு ஈடாக நவம்பர் 23 ஆம் தேதி சனியன்று கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வேலை நாளாக இருக்கும். நவம்பர் 1 ஆம் தேதி யன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொ ருட்டு , தேவையான பணியா ளர்களைக் கொண்டு இய ங்கும் என அதில் கூறப்பட்டு ள்ளது.