கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருநறையூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள ஏழை, எளிய மக்கள், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருநறையூர் ஊராட்சி தலைவர் ரமாமணி, திருநறையூர் மற்றும் நாச்சியார்கோவில் நன்கொடையாளர்கள் உதவியுடனும், ஏனநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேலு, கூட்டுறவு சங்க இயக்குனர் பாலாஜி, ஊராட்சி துணைத் தலைவர் உமாசுரேஷ், ஊராட்சி செயலர் குருமூர்த்தி உள்ளிட்டோர் அரிசி மற்றும் 300 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை 1200 குடும்பங்களுக்கு வழங்கினர்.