தஞ்சாவூர், அக்.19- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு முன்னிலை வகித்தார். மின்னணுவியல் துறைத் தலைவர் எம்.கே.சீனிவாசன் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் எ.அமலோற்பவ செல்வி வாழ்த்திப் பேசினார். கல்லூரி கணினி மேலாளர் ஜி.பொன்னுசாமி பேசினார். நிறைவாக, அமைப்பியல் துறைத் தலைவர் பி.சீனிவாசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 44 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.