tamilnadu

உலர் உணவுப்பொருட்கள் வழங்கல்  

தஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும், சத்து ணவு உண்ணும் சுமார் 100 மாணவர்களுக்கு, கொரோனா தடை  காலமாக இருப்பதால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்ப ட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி,  சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூற்று க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

;