தஞ்சாவூர், பிப்.13- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி மற்றும் சேதுபாவாசத்தி ரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களில், குப்பை அள்ளும் பயன் பாட்டிற்காக, கிராம ஊராட்சி களுக்கு, ஒவ்வொன்றும் ரூ.2 லட் சத்து 48 ஆயிரத்து 450 மதிப் புள்ள நவீன மின்கல இயங்கு வாகனம் வழங்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக பேரா வூரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 5 வாகனங்க ளும், சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 6 வாகனங்களும் வழங்கப்பட்டுள ளன. இந்த மின்கல இயங்கு வாகனம், பேட்டரி சார்ஜ் மூலம் இயங்குகிறது. பேராவூரணி ஊராட்சி ஒன்றி யம் இடையாத்தி, பெரியநாயகி புரம், செங்கமங்கலம், காலகம், திருச்சிற்றம்பலம் ஆகிய ஊராட்சிகளுக்கு, 5 நவீன மின்கல இயங்கு வாகனம் வழங்கப்பட் டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன் றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீ மகேஷ் வர வேற்றார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு ஊராட்சி தலை வர்களிடம் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தார். நிறைவாக கே. சுரேஷ் நன்றி கூறினார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் மரக்கன்றுகள் நடப்பட் டன. சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலை வர் மு.கி.முத்துமாணிக்கம் தலை மை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கை.கோவிந்த ராஜன், ரமேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். துணை வட் டார வளர்ச்சி அலுவலர் செல்வேந் திரன் வரவேற்றார். குருவிக் கரம்பை, குப்பத்தேவன், சரபேந்திரராஜன் பட்டினம், ஊமத்தநாடு, மரக்கா வலசை ஆகிய ஊராட்சிகளுக்கு, முதல் கட்டமாக 6 மின்கல இயங்கு வாகனம் வழங்கப்பட் டது. ஊராட்சி தலைவர்கள் குலாம் கனி, பாலு, வைரவன் மற்றும் பூமி நாதன், பள்ளத்தூர் தனபால் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.