தஞ்சாவூர், மே 4- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆவுடையாணிக்கோட்டை கிராமத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பில் உள்ள குப்பையில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியது. தீ தென்னந் தோப்பில் பரவி 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமானது. தகவலறிந்து பேராவூரணி தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.