கும்பகோணம், செப்.7- இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் தேசிய வாள் சண்டை போட்டி நடைபெற்றது. 23 மாநிலங்களில் இருந்து 900 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக வாள் சண்டை கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் சர்வதேச முதல்நிலை நடுவருமான ஜெ.செந்தில்குமார் தலைமையில் 33 மாணவ- மாணவிகள்(11 முதல் 18 வயது வரை) மூன்று பிரிவு களில் பங்கேற்றனர். போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த தர்ஷினி, ஹரிஷ், ஆதிஷ், ககண்ணா, நிரஞ்சன், தீனதயாளன் ஆகியோர், மயி லாடுதுறையை சேர்ந்த சௌபர்ணிகா, அட்சயா, கவின், பாலாஜி, அட்ஷரா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். மேலும் கும்பகோணம் சஞ்சய், வீரக்குமார், பிரபு, மயிலாடு துறை நடராஜன் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், மயிலாடு துறை தாயுப் அன்சார், ஹரி ராம்ஜி, ஜெயக்குமார், ஸ்ரீதர், வீர முருகன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் மாதம் தெற்கு ஆசிய அளவில் நேபாளத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். அம்மாணவர்களை, தமி ழக வாள் சண்டை கழகத் தலைவர் பி.எஸ்.கௌதமன், செய்தி தொடர்பாளர் செல்வராஜ், பயிற்சியாளர் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.