tamilnadu

img

திடக்கழிவு மேலாண்மை துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் 

 கும்பகோணம், செப்.18-  தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் திடக்கழிவு மேலாண்மை நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் நகர் நிர்வாக அலுவலகம் உத்தரவின்பேரில் துப்புரவு பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  பயிற்சி முகாமிற்கு கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன் தலைமை வகித்தார். முகாமில் கும்பகோணம் நகராட்சி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிகள் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மூன்று அமர்வுகளாக 180 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் துப்புரவு பணியில் இருக்கும் பணியாளர்கள் குப்பையை தரம் பிரிப்பது அவசியம் குறித்தும் குப்பைகள் பிரிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் மக்கும் குப்பைகள் உரம் ஆக்குவது குறித்த செயலாக்கம் குறித்து கூறப்பட்டது.  இதைத் தவிர உயரிய செயலாக்க மையத்திற்கு பணியாளர்களை அழைத்து அங்கு நடைபெறுகின்ற பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதனால் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பும் பொது மக்களிடம் போதுமான திடக்கழிவு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திறம்பட திடக்கழிவு மேலாண்மை துப்புரவு பணி செயல்படவும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கர், சுவாமிநாதன், முருகானந்தம், மணிகண்டன், பாலசுப்ரமணியன், அருள்தாஸ் மற்றும் மயிலாடுதுறை பிச்சைமுத்து, என்ஜிஓ மேனகா ஆகியோர் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.