tamilnadu

img

தஞ்சையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 7- மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், கும்பல் பாலியல் வன் புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, அடித்து சித்ரவதை செய்யப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கிப்பட்டி ரோட்டோரம் வீசிச் சென்ற கும்பலி டம், தீவிர விசாரணை நடத்தி கடுமை யான தண்டனைக்கு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந் திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், அடைத்து வைக்கப்பட் டுள்ள 3 தமிழ் பெண்களை மீட்டிட வேண்டும். இந்த குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும் அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயர் மருத்துவ சிகிச்சை, உயிர் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும்.

தஞ்சையில் நடைபெற்று வரும் பாலியல் தொழி லுக்கு முடிவு கட்டிட வேண்டும் என வலியுறுத்தியும், தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்டச் செயலாளர்  எஸ்.தமிழ்ச்செல்வி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளர சன், மாணவர் சங்க மாநகரச் செய லாளர் பி.அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச் செல்வி முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என்.வி.கண்ணன், எம்.மாலதி, பி.செந்தில் குமார், சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, மாதர் சங்க மாநகரச் செயலாளர் இ.வசந்தி, எஸ்.வன ரோஜா, ஜி.பார்வதி, வாலிபர் சங்கம் காதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகில், வாலி பர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரீஸ் அண்ணா துரை தலைமை வகித்தார். செயலா ளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, முருக.சரவணன், குலோத்துங்கன், கிறிஸ்துதாஸ், கட்டு மான தொழிலாளர் சங்கம் செல்வம், கே.செந்தில், ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பூதலூர் தெற்கு ஒன்றியம், பூத லூர் 4 ரோட்டில் நடைபெற்ற, ஆர்ப்பாட் டத்துக்கு, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் என்.வசந்தா தலைமை வகித் தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் கண்டன உரையாற்றி னார். எம்.சுல்தான், பி.பாலசுப்பிரமணி யன், சோலை.தெட்சணாமூர்த்தி, உஷாராணி, மல்லிகா, நாச்சியா ரம்மாள், வசந்தா மற்றும் மாதர் சங்கத் தினர் கலந்து கொண்டனர்.

செங்கிப்பட்டி 
செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் மலர்கொடி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.வி.கண்ணன் கண்டன உரை யாற்றினார். கட்சி ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர், சந்திரபோஸ், தமிழ்ச்செல்வன், தமிழரசன், தங்க மணி, குணசேகரன், காமராஜ், மாதர் சங்க நிர்வாகிகள் குமாரி, தமிழ்மணி, ராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக் காட்டுப்பள்ளியில், மாதர் சங்கம் சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட்ட துணைச் செய லாளர் பி. கலைச்செல்வி தலைமை வகித்தார்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 7- தஞ்சையில் வடமாநில இளம்பெண் கூட்டு பாலி யல் வன்புணர்வு, இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வரும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தஞ்சையில் நடைபெற்று வரும் பாலியல் தொழிலுக்கு முடிவு கட்டவும் மாவட்ட நிர்வா கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு கூட்டம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு தலைமையில் தனி மனித இடைவெளி யோடு நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட் டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியதாவது: தஞ்சையில் வடமாநில இளம் பெண் வன்புணர்வு தாக்குதலில் முழுமையான விசாரணை நடத்தி குற்ற வாளிகள் அனைவரையும் கைது செய்து, உரிய தண் டனை பெற்றுத் தர வேண்டும்.

 தஞ்சையில் சொகுசு பங்களாக்களில் நடைபெற்று வரும் பாலியல் தொழிலுக்கு முடிவு கட்ட வேண்டும். பாலியல் தொழில் நடத்தி வரும் கும்பலின் பிடியில் சிக்கி உள்ள பெண்களை மீட்க வேண்டும். பாதிக் கப்பட்ட வடமாநில இளம் பெண்ணுக்கு உரிய சிகிச்சை, பாதுகாப்பு, இழப்பீடு வழங்க வேண்டும். இதை வலி யுறுத்தி ஜூன்.11 தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  நுண்கடன் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகை செலுத்த சுயஉதவிக் குழுவினர் மற்றும் பெண்களை மிரட்டும் போக்கு உள்ளது.

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் பொதுமக்களை அச்சு றுத்தும் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது. அடுத்த 6 மாத காலத்திற்கு வட்டி தள்ளுபடியுடன், வசூல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  ஜூன் 12 அன்று டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்னதாக, கடைமடை வரை முறைகேடின்றி முழுமையாக தூர்வாரிடவும், கடை மடைப் பகுதி வரை பாசனத்திற்காக தண்ணீர் சென்று சேருவதையும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

 கொரோனா பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 9 அன்று இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம் நடத்துவது, இதே போல் ஜூன் 16 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளின் தோல்வியை கண்டித்தும், கொரோனா வைரஸ் பாதிப் பால் ஏற்பட்டுள்ள சீரழிவிலிருந்து மக்களை பாது காக்கும் கோரிக்கைகளை முன்வைத்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு பொதுமக்கள், அனைத்து ஜன நாயக சக்திகள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றியத் தலைவர் பி.ஆயி ராசு முன்னிலை வகித்தார். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பாலம்மாள், சுகன்யா, சாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, சிவசாமி, முரு கேசன், தங்கராசு, விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் மூத்த தோழர் கே.காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக் குறிச்சியில் மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் சி.கலாவதி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. எம்.கீதா, இலக்கியா ஆகியோர் கலந்து கொண் டனர். அம்மாபேட்டை ஒன்றியம் ஒன் பத்துவேலியில் கிளைத் தலைவர் மார்க்கரெட் தலைமையிலும், ராராமுத்திரைக்கோட்டையில் மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எம். சசிமதி தலைமையிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடு களில் பெண்கள், மாதர் சங்க நிர்வாகி கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட் டம் நடத்தினர்.