tamilnadu

கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்திடுக! மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.7- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் அலுவல கத்தில், சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் மாற்றுத்திற னாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல தனி வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தேர்தல் துணை வட்டாட்சியர், போக்குவரத்துத் துறை அதிகாரி உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச்சங் கம் சார்பில், “மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரண்டு ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. ஆதலால் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாங்க தகுதி உள்ளவர்கள் முன்னு ரிமை பட்டியலை வழங்க வேண்டும்.  கண் பார்வையற்ற மாற்றுத்திற னாளி ஒருவருக்கு, இரண்டு ஆண்டு காலமாக உதவித்தொகை பெறு வதற்காக அலைந்தும் இதுவரை நட வடிக்கை இல்லை. அவருக்கு உத வித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. முன்னுரிமைப் பட்டியலை வழங்க வும், கண் பார்வை அற்ற மாற்றுத் திற னாளிக்கு உதவித்தொகை வழங்க வும் அதிகாரிகள் ஒப்புதல் அளித்த னர்.  மேலும், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கைப் பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக் கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சார் பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று சாய்வு தளம் அமைத்தமைக் கும், பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் மாற்றுத் திறனாளி களுக்காக தனியாக இடம் ஒதுக்கிய தற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.   அதேபோல் அனைத்து அரசுத் துறை அலுவலகத்திலும் கைப்பிடி யுடன் கூடிய சாய்வு தளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என சார் ஆட்சியர் உறுதியளித் தார். அரசுத் துறைகளில் பணிபுரியக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு தனி கழிப்பறை வசதி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்ட தலைவர் ஏ.பஹாத் முகமது, மாவட்டத் துணைத் தலைவர் கே.கிருஷ்ண மூர்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ராவுத்தர், குமரேசன், பேரா வூரணி ஒன்றிய தலைவர் வின்சன் ஜெய ராஜ், ஒன்றியச் செயலாளர் சுதாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜலீல் முஹைதீன் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திற னாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.