tamilnadu

img

சிஏஏ-வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து மாணவர்கள் மறியல்

தஞ்சாவூர், மார்ச் 11- குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறாத மத்திய அரசைக் கண்டித்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத, தமிழக அரசைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். பொதுமக்கள் போராட்டம்  இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை 5.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டம் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.