தஞ்சாவூர் அக்.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஏனாதிக்கரம்பை கிரா மத்தில் உள்ள மாயம்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி வார சனிக்கிழமை முன்னிட்டு வீரராகவபுரம் கிராமத்தார்கள் சார்பில் மதலை எடுப்பு விழா நடந்தது. புரட்டாசி மாத கடைசி வார சனிக்கிழமை அன்று வீரராகவபுரம், ஏனா திக்கரம்பை, பஞ்சநதிபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் சாணாகரை கிராமத்தில் இருந்து களிமண்ணில் செய்யப்பட்ட மதலையை தோளில் எடுத்து கொண்டு நடைபயணமாக சுமார் 3 கி.மீ நடந்தவாறு, மாயம்பெரு மாள் கோயிலை வந்தடைந்தனர். மேலும் வீரராகவபுரம் கிராமத்தார்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அம்மை யாண்டி, வீரராகவபுரம், ஏனாதிக்கரம்பை, பஞ்சநதிபுரம், ஆவணம், கைகாட்டி, பைங்கால் ஆகிய கிராமத்தில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.