தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்க மங்கலம்- அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அறக்கட்டளை சார்பில், முதலமைச்சர் கொரோனா சிறப்பு நிவாரண நிதிக்கு ரூ 15 ஆயிரம் வழங்கப்பட்டது. அறக் கட்டளை தலைவர் வழக்கறிஞர் வி.ஏ.டி.சாமியப்பன் சார்பில், பள்ளியின் மேலாளர் நடராஜன் ரூ 15 ஆயிரத்துக்கான காசோலையை, பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி யிடம் திங்கள்கிழமை வழங்கினார். அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் யுவராஜ், துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் கிள்ளிவளவன், சுப்பிரமணியன், பாண்டியராஜன், சுமத்ரா, கமலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.