தஞ்சாவூர் அக்.22- பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கு வதில் உள்ள குறைகளை களைய வேண்டுமென அனைத்து கட்சிகள் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திங்கள்கிழமையன்று தஞ்சை ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தலைமை யில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து கட்சி சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: “தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 991 ஏக்கரில் சாகுபடி செய்த ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 723 விவசாயிகள் தங்களது பங்கு தொகை 1.5 சதவீதம் என, ரூபாய் 11.91 கோடியை பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறு வனத்தில் செலுத்தியுள்ளனர். கஜா புயல், மழைப் பொழிவு குறைவு, நிலத்தடி நீர் பாதிப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற காரணத்தினால் சாகுபடி செய்தி ருந்த அனைத்து நெற் பயிர்களும், போதிய உற்பத்தி இல்லாமல் விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டு நட்டம் அடைந்துள்ளனர். தாங்கள் காப்பீடு செய்துள்ள நெல் பயிருக்கு இழப்பீடு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், காப்பீட்டு நிறுவனம் குறைந்த அள விலான இழப்பீடு மற்றும் முற்றி லும் இழப்பீடு இல்லாத கிராமம் என கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் காப்பீடு செய் துள்ள விவசாயிகளுக்கு ரூ. 269 கோடியே 59 லட்சம் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்கி யுள்ளது. கஜா புயல் ஏற்பட்ட நேரத்தில் அறுவடை கணக்கெ டுப்பு நடந்ததால், மாநில அரசு ஊழி யர்களான வேளாண்மை துறை, புள்ளியியல் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழி யர்கள் கணக்கெடுப்பு பணிக்கு செல்லவில்லை. இதனால் காப்பீட்டு நிறுவனம் தங்கள் விருப்பம் போல வருவாய் கிராமம் வாரியாக குறைந்த இழப் பீட்டை பதிவு செய்து உள்ளது. அனைத்து ஊழியர்களையும் கொண்ட குழு முறையான கணக்கெ டுப்பு நடத்தி இருந்தால் கூடுதலாக இழப்பீடு கிடைத்திருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் பயிர் இழப்பீடு தொடர்பாக மறு விசாரணை செய்து குறைகளை களைந்து மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில், திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் எம்.பி, எம்எல்ஏக்கள் ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன், தஞ்சை டி.கே.ஜி.நீலமேகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், மதிமுக மாவட்டச் செய லாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமி யோன் சேவியர் ராஜ், திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஜெயக் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.