tamilnadu

img

கேரளாவைப் போல் சேமநல நிதி வழங்குக! எல்ஐசி முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஆக.25- பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்க்க கூடாது. எல்ஐசி யின் பங்குகளை பங்குச் சந்தையில்  பட்டியலிடும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறு த்தியும், எல்ஐசி முகவர்களுக்கு கேர ளாவைப் போல் தமிழகத்திலும் சேமநல நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், எல்ஐசி நிர்வா கம் மாதாமாதம் வழங்கும் டியூ லிஸ்ட்டை உடனடியாக வழங்க வே ண்டும். பாலிசி பத்திரங்களை உடனே வழங்க வேண்டும். முகவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள்  சங்கம் (லிகாய்) சார்பில் உணவு இடை வேளையின் போது செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட தலை மை அலுவலகம் முன்பு செயல் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கோட்டத்  தலைவர் தங்கமணி துவக்க உரையாற்றி னார். லிகாய் மாநிலச் செயலாளர் நி.ராஜா நிறைவுரையாற்றினார். வினோ தகன் மருத்துவமனை அருகே ஜீவன் சோழா கிளை அலுவலகம் முன்பு  கிளைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மத்திய பொதுக்குழு உறு ப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை எல்ஐசி அலு வலகம் முன்பு கிளைத் தலைவர் எஸ்.ரகு பதி தலைமை வகித்தார்.  மாநிலத் தலை வர் ஆர்.பூவலிங்கம் சிறப்புரையாற்றி னார். கும்பகோணம் எல்ஐசி அலுவல கம் முன்பு கிளைத் தலைவர் தமிழ்செ ல்வன் தலைமை வகித்தார். 

அரியலூர்
அரியலூர் எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் சிஐடியு மாவட்ட செய லாளர் பி.துரைசாமி, கிளை தலைவர் ராமலிங்கம், கிளை செயலாளர் கிரு ஷ்ணன் உள்ளிட்ட முகவர்கள் பங்கேற்ற னர். ஸ்ரீரங்கத்தில் எல்ஐசி அலுவலகம் முன்பு சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். கும்பகோணம் எல்ஐசி கிளையில் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.