tamilnadu

img

அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை வழங்குக! தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 12- அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.80 வீதம் மாதம் ரூ. 2,400 சம்பளம், ஊராட்சி  நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் சிஐடியு தொடர் போராட்டம் காரணமாக அரசு ரூ.1000 ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.  அதனை உடனடியாக வழங்கக்கோரி தஞ்சை ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து தூய்மைப் பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் கோரிக்கை மனு அளிக்க ப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர்  சி.ஜெயபால், முறைசாரா தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் பேர் நீதி ஆழ்வார், சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் கே.அன்பு, மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர் தஞ்சை ஒன்றிய ஆணையரைச் சந்தித்து, “அரசு அறிவித்தவாறு ஊதிய உயர்வு வழ ங்கக் கோரி” கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி ஒன்றிய  ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.