தஞ்சாவூர்:
தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளைப் பயன்படுத்தும், விசைப்படகுகளை, மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால், சாலை மறியல் போராட் டம் நடத்தப்படும் என நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தம்பிக்கோட்டை மறவக்காடு தொடங்கி,அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் என புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை 34-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். 1,500 நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட கடல்பகுதியில்,அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி, சலங்கை மடி, ரேஸ்மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால், கடலில் மீன்வளம் குறைகிறது என நாட்டுப்படகு மீனவர்கள்தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மீன்வளத் துறை அதிகாரிகளும், அடிக்கடி கடலுக்குள் சென்று, திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீதுநடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் தனியார் மண்டபத்தில், தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், “அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன் படுத்தி, விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும், விசைப்படகுகளை, 15 தினங்களுக்குள் பறிமுதல் செய்ய வேண்டும். படகுகளின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். மீன்வளத் துறைஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 5 மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களை ஒருங்கிணைத்து, கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.