தஞ்சாவூர், நவ.3- ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் வாகன உரிமையாளர்கள் கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதி முறைகள் தொடர்பாக தஞ்சாவூர் ஆட்சி யர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆ. ஆண்ணாதுரை தலைமையில் கலந் தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கைவிடப்பட்ட கிணறு கள், களிமண், மணல், சிறுகற்கள் மற் றும் உரிய பிற பொருட்களைக் கொண்டு தரைமட்ட அளவிற்கு நிரப்ப வேண்டும். கிணறுகளை தோண்டும், ஆழப்படுத்தும் மற்றும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் தொழிலை மேற்கொள்ளும் ஒவ் வொரு நபரும் பணிகளை ஆரம்பிக் கும் முன் அனுமதி பெற்றுள்ளாரா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். கிணற்றின் வகை, ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்ப வர் மற்றும் கிணற்றின் உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவ ரங்களையும் பணி நடக்கும் இடத்தில் அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப் பட வேண்டும், கிணறு தொடர்பான பணி மேற் கொள்ளும் இடத்தைச் சுற்றிலும் முள் கம்பிவேலி அல்லது தகுந்த தடுப்பு அமைக்கப்பட வேண்டும். 0.5 x 0.5 x 0.6 மீட்டர் அளவிலான சிமிட்டி அல்லது சிமிட்டி கற்காரையிலான தளம் நிலமட்டத்திலிருந்து 0.3 மீட்டர் மேற்புறமும், 0.3 மீட்டர் நிலத்திற்கு கீழ்புறமும் உள்ளவாறு கிணற்றை சுற்றிலும் கட்டப்பட வேண்டும். பணி இடைவேளையின் போது துளையிடப் பட்ட குழி அல்லது கிணறு சரியான முறையில் மூடப்பட்டிருத்தல் வேண் டும். பணி முடிவுற்ற பின் கிணற்றைச் சுற்றி உள்ள சகதி குழிகளும். கால் வாய்களும் நிரப்பி மூடப்பட வேண்டும். முன்பிருந்த நிலைக்கு தரை மட்ட நிலை யை கொண்டு வர வேண்டும். கிணற் றின் மேற்புறத்தை உறுதியான பொருள் கொண்டு மூட வேண்டும் என கூட் டத்தில் அறிவுறுத்தப்பட்டது.