tamilnadu

img

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகள்

 தஞ்சாவூர், அக்.23- தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், இளநிலை உதவியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களை கொண்டு, பேராவூரணி நகர் பகுதியில் தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளமான இடங்களில் மண்ணைக் கொட்டி சமப்படுத்தி, கொசுப்புழு உற்பத்தி யாகாமல் இருப்பதற்காக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப் பட்டு வருகிறது. தொடர்ந்து நகர் முழுவதும் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி, நிலவேம்பு குடிநீர் வழங்குதல், புகை மருந்து அடித்தல், வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தும் பணி நடை பெற்று வருகிறது. மேலும், கொதிக்க வைத்த குடிநீரை ஆற வைத்து பயன்படுத்துமாறும், காய்ச்சல் ஏதும் இருந்தால் அரசு மருத்துவமனையை நாடுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.