தஞ்சாவூர் ஆக.10- தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பைங்கால் கிருஷ்ணா ஏரி, ஆவணம் பெரியநாயகிபுரம் தேவக்குளம் ஆகியவற்றில் தலா ரூ1 லட்சம் செலவில் நடைபெறும் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன்(வ.ஊ), கோ.செல்வம்(கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் அசோக்குமார், விபாலசுப்ரமணியன், ஆர்.இளங்கோ, என்.எஸ்.கருப்பையா, ஏ.பழனிவேல், ஒப்பந்தகாரர் ஞானபண்டிதன், சங்கர், ஆவணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சண்முகநாதன், க.அடைக்கலம், டி.பெத்தபெருமாள், கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.அடைக்கலம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.முத்துராமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.மகேஷ், கண்ணன், பொறியாளர் பாலசுப்ரமணியன், பணி மேற்பார்வையாளர் மதிவாணன், ராஜேஷ் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் நாடியம் ராமகுரு குட்டைக்குளம், பள்ளத்தூர் மண்ணடிக்குட்டை, சொக்கநாதபுரம் தாமரைக்குளம் ஆகியவற்றில் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தொடங்கி வைத்தார். முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ். நீலகண்டன், நாடியம் கூட்டுறவு வங்கித் தலைவர் சிவ.மதிவாணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மணிசத்திரம் பாலு, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராசு, கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர். முன்னதாக பைங்கால் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ3.40 லட்சத்தில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை எம்எல்ஏ மா.கோவிந்தராசு திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் வி.முத்துக்குமரன் வரவேற்றார். கே.எஸ்.கருப்பையா, ஏ.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.