tamilnadu

img

கவிஞர் தமிழ்ஒளியின் நினைவு நாள்! - தமிழ் அறிஞர்கள் மரியாதை

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி 60ஆவது நினைவு நாளை முன்னிட்டு மொழிப்புலத்தில் இருக்கும் அவரது சிலைக்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அதனைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கலைப்புல முதன்மையர் பேராசிரியர் பெ.இளையாப்பிள்ளை, நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் சீமான் இளையராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் பேராசிரியர் முருகன், பேராசிரியர் வி. பாரி எழுத்தாளர்கள் களப்பிறன்,  ஆர் விஜயகுமார்,ஃ பி சத்தியநாதன், பி செந்தில்குமார், கோபு பழனிவேல், கவிஞர் வல்லம் தாஜ்பால், பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
 

;