தஞ்சாவூர், ஜூலை 26- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்க மங்கலம் - அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவ-மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். பள்ளி மாணவி எஸ்.சப்ரினா 567, மாணவர்கள் ஏ.முகமது ஆசிக் 562, டி.ஹரிபிரகாஷ் 555, மாணவி ஜெ.அக்சயா 554 மதிப்பெண்களுடன் முதல் 4 இடங்களைப் பெற்றுள்ளனர். 500-க்கு மேல் 25 மாணவர்களும், 450-க்கு மேல் 45 மாண வர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 100 சத மதிப்பெ ண்களும் மாணவர்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி சதவீ தம் 98.5 ஆகும். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் வி.ஏ.டி.சாமியப்பன், அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.