tamilnadu

img

பேராவூரணி அரசு மருத்துவமனை கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள மரங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.31-  பேராவூரணி காமராசர் அரசு தலைமை மருத்துவ மனை பேராவூரணி வட்ட த்தின் தலைமை மருத்துவ மனையாக உள்ளது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறு வதற்காக உள்நோயாளி களாகவும், புற நோயாளிக ளாகவும் வந்து செல்கின்றனர்.  மருத்துவமனை வளாக த்தில் அறுவை சிகிச்சைப்  பிரிவிற்காக சில ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் முளைத்துள்ள மரங்களால் கட்டிடம் சேத மடைந்து வருகிறது. கட்டி டத்தின் அருகில் வள ர்ந்துள்ள மரங்களின் வேர்கள் கட்டிடத்தின் அடிப்பகு திக்குள் சென்று கட்டிடம் வலு விழந்து இடிந்து விழும் நிலை யில் உள்ளது.  எனவே சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பார்வை யிட்டு மரங்களை அகற்றி கட்டிடங்களை பாதுகாத்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் சட்ட உரிமைகள் கழக, பேராவூரணி நகர அமைப்பாளர் சிவகுமார் கூறியதாவது:  “அரசு பல லட்சங்களை  செலவு செய்து மருத்துவ மனைக்கு கட்டிடங்களை கட்டி தந்துள்ளது. சுகாதா ரத்துறையினர் பராமரிக்கா மல், கட்டிடத்தில் மரங்கள் முளைத்து கட்டிடங்கள் பாழ டைந்து இடியும் நிலையில் உள்ளது. எனவே கட்டி டத்தில் வளர்ந்து வரும் மரங்களை அப்புறப்படுத்தி மருத்துவமனை கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.