tamilnadu

முகக்கவசம்  அணியாதவர்களுக்கு அபராதம்

 தஞ்சாவூர், மே 20- தஞ்சாவூர் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களுக்கு செல்வோர், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் பேராவூரணி கடைவீதி, அண்ணாசிலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணியாத நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன், தனது சொந்தப் பணத்தில் இருந்து முகக் கவசங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்