tamilnadu

img

நெல் கொள்முதல் விவசாயிகளின் விவரங்கள் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 53 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. டிச.26 முதல் தற்போது வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.  நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் விவரங்கள் மற்றும் அதற்குண்டான தொகையினை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவை நுகர்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். நுகர்பொருள் வாணிப கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

;