தஞ்சை மாவட்டம் நாட்டாணிக்கோட்டையில் பயணியர் நிழற்குடை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, நகர துணைச் செயலாளர் பால் ஏ.பக்கர், அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.