tamilnadu

img

நிதின் கட்காரி உண்மையை தான் சொன்னார்: முத்தரசன் பேச்சு

கும்பகோணம், ஏப்.15- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஐ நகர செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, திமுக மாவட்ட செயலாளர் சூகல்யாணசுந்தரம் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நகர செயலாளர் சுபா தமிழழகன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் முருகன்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்ட குழு எம்.கண்ணன் பார்த்தசாரதி நகர செயலாளர் செந்தில்குமார் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி திராவிட கழகம் மாவட்டத் தலைவர் கௌதமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநிலத் தலைவர் முத்தரசன் பேசுகையில், செவாலியர் பட்டத்தை மோடிக்கு கொடுத்துவிடலாம். அனைத்து தேர்தல் பிரச்சாரமும் மோடியின் நாடகம் அல்லவா? மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, குடும்பம் நடத்ததெரியாதவர்க்கு நாட்டை வழி நடத்ததெரியாது என்று சொன்னார். உண்மை தான்தற்போது நாட்டை வழி நடத்துபவர்கள் அவர்கள் தான். இவர்கள் ஆட்சி செய்வது கொள்கை கூட்டணி அல்ல கொள்ளை கூட்டணி என்றார்.

;