தஞ்சாவூர், நவ.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ராமச்சந்திரா திரு மண மண்டபத்தில் தமிழ்நாடு தினம்- தமிழ்மொழி வளர்ச்சி கருத்த ரங்கம் சனிக்கிழமை மாலை நடை பெற்றது. கருத்தரங்கிற்கு பட்டுக் கோட்டை ஒன்றிய செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம். செல்வம் வரவேற்றார். இடைக் கமிட்டி செயலாளர்கள் வை.சிதம் பரம், ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஏ.வி.குமாரசாமி, டி.கோவிந்தராசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் பேசி னார். தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநில வன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “ஒரு சமூகம் எப்படி உருவானது. தனது தாய் மொழி யில் படித்து தானே அந்த சமூகம் முன்னேறியது. இன்றைக்கு பன் னாட்டு மூலதன கம்பெனிகள் குவிப்பு காரணமாக பல சமூகப் பிரச்சனை கள் உருவாகின்றன. அவர்களுக்கு இனம், மொழி, பண்பாடு என ஒன் றும் கிடையாது. ஒரு சமூகமே நோய் வாய்ப்பட்ட நிலையில் உள்ளது. அதனை மாற்றவே இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது. தமிழில் பெயர் வைப்பது அவமானமல்ல. அது நமது அடையாளம். ஒருவனின் பெயர் அவனது பண்பாட்டை அடையாளத்தை காட்டுவதாக அமைய வேண்டும். உ.பி.யில் நடைபெற்ற தேர்வில் ஏராளமான மாணவர்கள் இந்தி மொழியில் தோல்வியடைந்தனர். அதற்கு என்ன காரணம் உபியில் இந்தியை தாய் மொழியாக கொண்ட மக்களும் இருந்தனர். போஜ்புரி, மைதிலி, மகதி என மொழிகளைப் பேசக் கூடிய மக்களும் பெரு வாரியாக இருந்தனர். அங்கே பள்ளி களில் பயிற்று மொழியாக இந்தி மொழி கொண்டு வரப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமது மொழியை மறந்து இன்று அது அழி யும் நிலையில் உள்ளது. ஹிந்தி தான் தெரியுமே, எதற்கு உன் தாய் மொழி யில் பேசுகிறாய் என்று இந்தியை வலிந்து திணித்து, அந்தந்த மாநில மொழிகளை அழித்தது இந்தி. இதே நிலை தமிழகத்தில் ஏன் வராது? இந்தி திணிப்பை நாம் ஏற்க முடியாது. போஜ்புரி, மகதி போன்ற மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழி கள். ஆனால் இன்றைக்கு அந்த மொழி பேசப்பட்டு வந்த உத்தரப்பிர தேசம், பீகார் போன்ற பகுதிகளில் இன்றைக்கு அழியும் நிலையில் உள்ளது. இந்தி படிக்க சொல்கிறீர்களே. அப்படி அதில் என்ன இருக்கிறது? தமிழில் என்ன இல்லை? தமிழில் எல்லாம் இருக்கிறது. அறிவியல் இருந்ததனால் தான் கல்லணை, தஞ்சை பெரிய கோயில் போன் றவை கட்டி முடிக்கப்பட்டது. தாவ ரங்களுக்கு உயிருண்டு என கண்டு பிடித்து சொன்ன ஜெகதீஸ் சந்திர போசுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம், ஆறு அறிவு உண்டு என தெரிவித்துள் ளது. நாம் மொழியை பெருமைக் காக பேசுபவர்கள் கிடையாது. ஹீப்ரு மொழி இன்று புழக்கத்தில் இல்லை. பாலி மொழி இன்று புழக் கத்தில் இல்லை. அலெக்ஸாண்டர் பேசிய கிரேக்க மொழி இன்று புழக் கத்தில் இல்லை. ஆனால் நம் பாட்டன் தொல்காப்பியன் பேசிய தமிழ் மொழி இன்றைக்கும் உள்ளது. பல்வேறு ஆதிக்கங்களையும் தாண்டித் தாண்டி தன்னைத் தானே தாங்கிக் கொண்டு வளர்கிறது. தமிழ் மொழி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ் இன்று ஆறாவது நிலமான இணையத்தில் கிடைக்கிறது. இன்றைக்கு தன்னைத் தானே தக வமைத்துக் கொள்வதில் தமிழ் தயா ராக இருக்கிறது. நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வி”. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என். சிவகுரு, ஆர்.வாசு, ஆர். கலைச்செல்வி, எஸ்.கோவிந்தராசு, ஆர்.காசிநாதன், வி. கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றியக் குழு உறுப்பினர் சு.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
கும்பகோணம் கும்பகோணத்தில் நடந்த தமிழ் மொழி வளர்ச்சி கருத்தரங்கிற்கு குடந்தை நகர செயலாளர் செந்தில் குமார் தலைமை ஏற்றார். மாவட்ட குழு உறுப்பினர் சி. நாகராஜன் வர வேற்புரை ஆற்றினார். குடந்தை ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ், திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செய லாளர் ஜீவபாரதி, பாபநாசம் ஒன் றிய செயலாளர் காதர் உசேன், திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செய லாளர் பழனிவேல், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் என்.நன்மாறன் சிறப்புரை ஆற்றி னார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், சின்னை பாண்டியன், ஜெயபால், அருளரசன் செந்தில்குமார் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பக் கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.