tamilnadu

img

அன்னை கல்லூரி பட்டமளிப்பு விழா

கும்பகோணம், பிப்.6- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை கல்வி குழுமத்தின் 16வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடை பெற்றது விழாவிற்கு குழுமத்தின் தாளாளர் அப்துல் கபூர் தலைமை தாங்கி னார். அன்னை கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவாசுகி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் மகா தேவன் பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சபாநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மேலாண்மை துறை பேராசிரியர் முனை வர் புண்ணியமூர்த்தி பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற பொதுமேலாளர் மருத முத்து ஆகியோர் பேருரை நிகழ்த்தி, இளங்கலை மற்றும் இளம் அறிவியல் படித்த 653 மாணவர்களுக்கும் முது நிலை அறிவியல் முடித்த 200 மாணவர்க ளுக்கும், பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 80 மாணவ மாணவிகளும் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 122 மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் ஆயிரத்து 55 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். மேலும் பல்கலைக்கழக அளவில் 31 தரச் சான்றிதழ் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் குழுமத்தின் செயலாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழா வில் குழுமத்தின் தலைமை செயல் அலு வலர் ராஜ்குமார், இயக்குனர்கள் ரவி நஜி புதீன், அன்னை யோகா மற்றும் அறி வியல் கல்லூரி முதல்வர் தலைமை மருத்துவர் ஜோதி நாயர் கல்வியல் கல்லூரி முதல்வர் சண்முகநாதன், அன்னை பாத்திமா கல்வியல் கல்லூரி முதல்வர் முத்துசாமி, அன்னை பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் ஜெயக் குமாரி, அன்னை நர்சிங் கல்லூரி முதல்வர் கோவிந்த குமாரி மற்றும் துணை முதல்வர்கள் துறைத் தலை வர்கள், பெற்றோர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.