தஞ்சாவூர், அக்.28- மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தஞ்சை மாவட்ட பொறுப்பா ளரும், பட்டுக்கோட்டை மயக்க மருந்து நிபுணருமான டாக்டர் சதாசிவம் 46 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பேரா வூரணி அரசு மருத்துவமனை க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுமார் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள 100 படுக்கை விரிப்புகள், போர்வை, டெங்கு சிறப்பு வார்டுக்கு தேவையான கொசு வலைகள் மற்றும் நாப்கின்கள் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கரனிடம், டாக்டர் சதாசிவம் திங்கள்கிழமை அன்று நேரில் வழங்கினார். அப்போது பட்டுக் கோட்டை, பேராவூரணி நிர்வாகிகள் இராஜ சேகரன், குமார், மெய்யப்பன், தமிழரசன், சரவணன், புதுமை, நெப்போலியன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.