தஞ்சாவூர். ஜூன் 4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி வட்டார வேளாண்மை துறை மூலம் அம்மையாண்டி கிராமத்தில், நுண்ணீர் பாசனத் திட்டம், கிராம அளவிலான சிறப்பு முகாம், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி தலைமையில் நடை பெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், தவமணி, ஊராட்சி மன்றத் தலைவர் வை.முத்து ராம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஒன்றியப் பெருந்தலைவர் சசி கலா ரவிசங்கர் முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். இம்முகாமில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராணி குருசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் முழுமதி ராஜேந்திரன் பல விவசாயிகள் பங்கேற்றனர்.