tamilnadu

img

மேட்டூர் அணை நீரை வரவேற்க புதுப்பொலிவு பெறும் கல்லணை.....

தஞ்சாவூர்:
ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக கல்லணை புதுப்பொலிவு பெற்று வருகிறது.

டெல்டா குறுவை சாகுபடிக்கு, சேலம் மாவட்டம், மேட்டூர்அணையில் இருந்து, ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும் எனமுதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் ஜூன் 16 இரவு தஞ்சை மாவட்டம், கல்லணையை வந்தடையும் எனவும், ஜூன் 17ல், டெல்டா மாவட்டபாசனத்திற்காக, காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படலாம் எனவும்எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்றின் 116 ஷட்டர்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. ‘கிரீஸ்’ வைத்து, முறையாக செயல்படுகிறதா என்பதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.மேலும், புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக, கரிகாலசோழன், காவிரி அன்னை, ராஜராஜ சோழன், அகத்தியர், விவசாயி சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள், முழு வீச்சில்நடந்து வருகின்றன. மேலும், கல்லணையில் குவிந்து கிடக்கும் மணல் திட்டுகளையும் சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் உற்சாகத்தோடு சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். அத்துடன் கல்லணை திறக்கப்படுவதற்குள்ளாக, தூர்வாரும் பணியை விரைந்து முடித்து, கடைமடை வரை தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனஅரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;