புதுதில்லி, மே 11- பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதி ராக, நாடு முழுவதும் சென்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சனிக்கிழமை முதலே பிரச்சாரத்தையும் அவர் துவங்கியுள் ளார்.
ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மதவாத ஆட்சிக்கு எதி ராக ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் நாட்டின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. இதனால், அதிர்ச்சி யடைந்த பாஜகவும் பிரதமர் மோடியும், இந்த கூட்டணியை பலமிழக்கச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன், முக்கியத் தலைவர்கள் பலர் மீது, அமலாக்கத் துறை மூலம் பொய் வழக்குகளைப் போட்டு சிறையிலடைக்கும் வேலையில் இறங்கியது. அவர்களில் தில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
இந்நிலையில், அமலாக்கத்துறை தன்னைக் கைது செய்ததைச் சட்ட விரோ தமென அறிவிக்க வலியுறுத்தி, கெஜ்ரி வால் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதி மன்ற அமர்வு, அமலாத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி வெள்ளியன்று கெஜ்ரிவா லுக்கு ஜூன் 1 வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வெள்ளியன்று மாலை தில்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரி வாலுக்கு ஆம் ஆத்மி கட்சியினர், பொது மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்த னர்.
தொடர்ந்து தனக்கு முன்பு கூடியிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்பு கெஜ்ரி வால் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:
ஊழல் வாதிகள் எல்லாம் பாஜகவில்...
“நான் சிறையில் இருந்து நேராக உங் களைப் பார்க்க வந்துள்ளேன் 50 நாட்க ளுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறிய கட்சி, நாங்கள் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி யில் இருக்கிறோம். ஆனால் பிரதமர் எங்கள் கட்சியை நசுக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஒரே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத் யேந்திர ஜெயின் எனும் நான்கு முக்கியத் தலைவர்களை சிறைக்கு அனுப்பினார். இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துவிடலாம் என பிரதமர் நினைத் தார். அது நடக்கவில்லை.
ஊழலுக்கு எதிராகப் போராடுவ தாகப் பிரதமர் கூறுகிறார். ஆனால் நாட் டில் உள்ள திருடர்கள் எல்லாம் பாஜகவில் தான் உள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு ஒருவரை ஊழல்வாதி, மோசடிக்காரர் என பாஜகவினர் கூறுவார்கள். ஆனால் அந்த நபர் பாஜகவில் இணைந்தால் உடன் அவரை துணை முதல்வராக்கி, அமைச்சர் பதவியும் தருகிறார்கள்.
சர்வாதிகாரிகளை இந்தியா ஏற்றதில்லை
நமது நாடு மிகவும் பழமையானது, இங்கே ஒரு சர்வாதிகாரி ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற போதெல்லாம், மக் கள் அவரை வேரோடு பிடுங்கி எறிந்தி ருக்கிறார்கள். இன்று மீண்டும் ஒரு சர்வாதிகாரி ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்.
கடந்த 75 ஆண்டுகளில் பாஜக போன்று வேறு எந்தக் கட்சியும் இந்த ளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறுத்தி இருக்க மாட்டார்கள்.
பாஜக மிகவும் ஆபத்தான ஒன்றை செய்கிறது. அவர்களின் நோக்கம் ‘ஒரே நாடு, ஒரே தலைவர்’. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறைக்கு அனுப்பு வார். இது தான் அவர்கள் திட்டம்.
எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களுக்கு குறி
ஏற்கெனவே ஆம் ஆத்மி அமைச்சர் கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி யின் அமைச்சர்கள் சிறையில் உள்ள னர். அடுத்து ஆட்சி அரியணையில் உள்ள மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி, பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே என எதிர்க்கட்சி தலைவர் களுக்கும் குறிவைத்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர்களை மட்டு மின்றி சொந்த தலைவர்களையே கூட கட்டாயப்படுத்தி அரசியலில் இருந்து விலக வைக்கிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சவு கான், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார், ராமன் சிங் ஆகியோரது அர சியல் கதை முடிந்துவிட்டது.
இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி
எனக்கு 22 நாட்கள் அவகாசம் வழங்கி யதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி. இந்த நாட்களில் நாடு முழுவதும் சென்று நாட்டுக்காக போராடுவேன். நமது தேசத்தை சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று 140 கோடி மக்களிடமும் மன்றாடுவேன். தயவு செய்து என் தேசத்தை காப்பாற்றுங்கள். என் இதயம், ஆன்மா மற்றும் என்னிடம் உள்ள அனைத்தையும் இந்த நாட்டுக் காக அர்ப்பணிப்பேன்.
தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக் கும் என்று பல்வேறு நிபுணர்களிடம் பேசி னேன். ஜூன் 4 அன்று அவர்கள் (பாஜக) ஆட்சி அமைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு 200-220 இடங்கள் கிடைக்கும். அதற்கு மேல் கிடைக்காது. ஒன்றிய ஆட்சியில் இந்தியா கூட்டணி அமரும். அந்த ஆட்சியில் ஆம் ஆத்மி கட்சி இருக்கும்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசியுள் ளார்.
பாஜகவின் சதியை முறியடித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
கெஜ்ரிவால் விடுதலைக்கு சிபிஎம் வரவேற்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கப்பட்டிருப் பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
“தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்ற உத்த ரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வரவேற்பு தெரிவிக்கிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் மக்களவைத் தேர்தல்களின் போது கெஜ்ரி வாலைப் பிரச்சாரம் செய்வதிலிருந்து தடுத்திட வேண்டும் என்ற முக்கியமான நோக்கம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு மோடி அரசாங்கம் மற்றும் அமலாக் கத்துறையினரின் இழிவான திட்டங்களை அம்ப லப்படுத்தி இருக்கிறது.”
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)