india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தி வந்த நிலையில், வெப்ப சலனம் காரண மாக தில்லி, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லேசா னது முதல் கனமழை வரை பெய்தது.

ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஆர்.லட்சுமிகாந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

“பிரதமர் மோடி ஒடிசாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கூறுகிறார். ஆனால் நான் ஒன்று கேட்கிறேன். ஒடிசா மாநிலத்தின் அனைத்து மாவட்ட பெயர்களையும் குறிப்புக ளின்றி சொல்ல முடியுமா?” என அம்மாநில முதல் வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

கர்ப்பம் குறித்த தனது புத்தகத்தின் தலைப் பில் ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன் படுத்தியதற்காக நடிகை கரீனா கபூருக்கு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

“மோடி அரசுக்கு எதிராக சமூக ஊட கத்தில் விமர்சித்து வருண் அதிகம் பதிவிட்டதே அவருக்கு சீட் கிடைக்காமல் போன தற்கு காரணம். வேறு காரணம் எதையும் என்னால் அறிய முடியவில்லை” என தன் மகன் வருண்  காந்திக்கு சீட் கிடைக்காததற்கு பாஜக மூத்த தலை வர் மேனகா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேசத்தின் அக்பர்பூர் நக ரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும். அக்பர் பூர் மட்டுமல்லாமல் அலிகார், அசம்கார், ஷாஜ ஹான்பூர், காசியாபாத், பிரோசாபாத், பரூக்கா பாத் மற்றும் மொரதாபாத் போன்ற பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது. 

“மேற்குவங்க ஆளுநர் அவர்களே, உங்க ளின் கட்டமைக்கப்பட்ட புனைவுக் கதை இனியும் செல்லுபடியாகாது. தன் மீது இப்படி யான பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவிக் கப்பட்ட பின்பும் ஏன் இன்னும் ராஜினாமா செய்ய வில்லை என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

விஜயவாடா
ஆந்திராவில் மீண்டும் ரூ.7 கோடி பறிமுதல்

ஆந்திராவில் சட்டமன்றம் (175) மற்றும் மக்களவை தொகுதிகளு க்கு (25) ஒரே கட்டமாக மே 13  அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சனியன்று மாலை ஓய்ந்த நிலையில், வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. 

ஆந்திராவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலை யில், கடந்த மார்ச் 2 அன்று 4 கன் டெய்னர் லாரிகளில் ரூ.2,000 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்டும் இந்த பணம் யாருடை யது என இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், கோதாவரி மாவட்டத்தில் சனி யன்று ரூ.7 கோடி பணம் கைப்பற்றப் பட்டுள்ளது.

கோதாவரி புறவழிச்சாலையில் உள்ள  அனந்தபள்ளியில் மினி வேன் மீது லாரி  மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக் குள்ளான மினி வேனை போலீசார் சோத னையிட்டபோது தவிடு மூட்டைகளுக்கு இடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.7 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பாட்னா
பீகாரின் ககாரியா மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு

பீகார் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ககாரியா தொகுதியின் இரண்டு வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் ஆணையம் மறுவாக்குப் பதிவை நடத்தியது.

கடந்த மே 7 அன்று நடந்த தேர்தலின் போது, பெல்டவுர் சட்ட மன்ற தொகுதி கோக்ரி சப்-டிவிஷன் 182 மற்றும் 183 இல் உள்ள வாக்குச் சாவடிகளை கைப்பற்றிய வன்முறை யாளர்கள், இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை சேதப்படுத்தி னர். சஹ்ரான் கிராமத்தின் ஒரு பகுதியி னர் வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை நிராகரித்ததால் இந்த வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகளைப் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை என்று ‘மகா கூட்டணி’ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டது. மார்க்சிஸ்ட்கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சஞ்சய் குமார் குஷ்வாஹா வாக்குச்சாவடிகளை பார் வையிட்டார். 58.20 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளரின் வாக்கு வித்தி யாசம் ஒரு லட்சத்தை தாண்டும் என்று “மகா கூட்டணி” மதிப்பீடு செய்துள்ளது.

பெங்களூரு
பாலியல் வழக்கில்  பாஜக நிர்வாகி கைது

 பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத் த்தின் தலைவரும், முன் னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை பாலி யல் பலாத்காரம் செய் தது தொடர்பாக    3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ ஏப்ரல் 25 அன்று வெளி யாகியது. வீடியோ ஆதாரத்தின் அடிப்ப டையில் கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 700க்கும் மேற்பட்ட பெண்கள் பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளித்துள் ளனர். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். 

இதே பாலியல் விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணாவை கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹாசன் மாவட்ட முக்கிய பாஜக நிர்வாகி ஒருவரும் சிக்கியுள்ளார். ஹாசன் மாவட்ட பகுதியின் மூத்த பாஜக தலைவ ரும், வழக்கறிஞருமான ஜி.தேவராஜே கவுடா மீது ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர்,”தனது சொத்தை  விற்க உதவுவதாகக் கூறி தேவராஜே கவுடா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என ஹோலெநரசிபுரா நகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வெள்ளியன்று ஹோலெநரசிபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேவராஜே கவுடாவை சனி யன்று காலை கைது செய்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தால் பல முக்கிய அரசியல் தலைவர்கள் அடுத்த டுத்து சிக்கி வரும் நிலையில், கர்நாடகத் தில் பாஜக கூட்டணி மிரண்டு போயுள்ளது.