tamilnadu

தஞ்சை , நாகை , புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு அங்கீகாரம்
மன்னார்குடி, அக்13-  தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு தமிழக அரசின் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்க ளுக்கான சட்டத்தின் கீழ் அங்கீகாரத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சிகிச்சை, மருத்து வமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து தல், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக் கான சிறப்பு விதிமுறைகள் ஆகியன அரசின் சார்பில் வகுக்கப்பட்டுள்ளது. இவைகள் முறையாக கடை பிடிக்கப்படுகின்றனவா என்பதை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழி காட்டுதலின்படி அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ நிபு ணர்கள், அரசு அலுவலர் அடங்கிய குழு மாவட்டங்கள் தோறும் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு, மருத்து வர்களின் தகுதி, மனிதவளம், தரநிர்ணய சான்றிதழ்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நெறிமுறைகள் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்து அரசுக்கு ஆய்வ றிக்கை அனுப்பியுள்ளது.  அதனடிப்படையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு மருத்துவ நிறுவனங்களுக்கான சட்டத்தின் கீழ் அங்கீ காரச் சான்றிதழை வழங்கினார். ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட சுகா தாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் காந்தி முன்னி லையில் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பா ளர் டாக்டர் ரவிச்சந்திரன், துணை மருத்துவ கண்காணிப்பா ளர் டாக்டர் பிரவின் ஆகியோர் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

பொது விநியோகத் திட்ட முகாம்
தரங்கம்பாடி, அக்13- நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள மாணிக்கப்பங்கு ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் பெ.பிரான்சுவா தலைமையில் நடை பெற்ற முகாமில் மாணிக்கப்பங்கு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை யில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றுதல், புதிய குடும்ப அட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலக மனநல தின விழிப்புணர்வு பயிற்சி
அறந்தாங்கி, அக்.13- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஸ்கார்ப் இந்தியா மனச் சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் மனநல மேம்பாடு மற்றும் தற்கொலை தடுப்பு என்ற தலைப்பில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்பு ணர்வு பயிற்சி அளித்தனர்.  குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மேலாளர் வசந்தி தலைமை யில் மேலாளர் மணரஞ்சிதம் முன்னிலையில் ஸ்கார்ப் இந்தியா ஒருங்கிணைப்பாளர் டி.குணசெல்வி பேசினார்.