tamilnadu

img

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஆக.3- எல்ஐசி பங்குகளை பங்குச்சந்தையில் விற்ப னை செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர் சங்கம் மற்றும் முகவர் சங்கம் சார்பில் தஞ்சையில் வெள்ளி க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை கோட்ட எல்ஐசி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.  லிக்காய் முகவர் சங்க மாநிலச் செயலாளர் ராஜா, வளர்ச்சி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் அரசு, எல்ஐசி முதல்நிலை அலுவலர் சங்க தலைவர் உஷா, பொதுக் காப்பீடு ஊழியர் சங்க தலைவர் சத்யநாதன் மற்றும் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் சேது ராமன் தென்மண்டல துணைத் தலைவர் ஆர்.புண்ணிய மூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எல்ஐசி பங்குகளை பங்குச்சந்தையில் வெளி யிடும் முடிவைக் கைவிட வேண்டும். பொதுத்துறை யில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிக்க கூடாது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும் முடி வைக் கைவிட வேண்டும்” என வலியுறுத்தி கோரிக்கை  முழக்கங்கள் எழுப்பப் பட்டன.