tamilnadu

img

எல்ஐசி கிளை துவக்க விழா  

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், மதுக்கூரில் எல்ஐசி கிளை துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை தலைமைக் கிளையின் கீழ், துவக்கப்பட்ட 4 ஆவது துணைக் கிளையான மதுக்கூர் கிளை திறப்பு விழாவிற்கு, முதுநிலை கோட்ட மேலாளர் கே.வெங்கட்ரா மன் முன்னிலை வகித்தார். விழாவிற்கு மண்டல மேலாளர் கே.கதிரேசன், தலைமை வகித்து, புதிய கிளையைத் திறந்து வைத்துப் பேசினார். வணிக மேலாளர் கே.ராம்குமார், விற்பனை மேலாளர் ஆர்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுக்கூர் துணைக் கிளை  மேலாளர் ஜி.மகேந்திரன் வரவேற்றார். பட்டுக்கோட்டை கிளை முதுநிலை மேலாளர் கே.குமார் நன்றி கூறினார்.

;