தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் லூர்துமாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. காரைக்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலி ருந்து 692 காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். போட்டியை ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில், மாநி லங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங் கம் துவக்கி வைத்தார். கோட்டாட்சியர் வேலு மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும், காளைகளை அடக்கிய வீரர் களுக்கும் பரிசு பொருட்களை வழங்கப்பட் டது. போட்டியின் போது 15 வீரர்களுக்கும், 11 பார்வையாளர்களுக்கும் காளைகள் முட்டி யதில் காயம் ஏற்பட்டது. ரெட்டிபாளை யத்தைச் சேர்ந்த சாமி என்பவர் சிறந்த காளை பிடி வீரராகத் தேர்ந்தெடுக்க ப்பட்டார். தஞ்சா வூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், ஒருங்கி ணைந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் காந்தி, கால்நடை பராம ரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டனர்.