tamilnadu

img

திருச்சிற்றம்பலத்தில் ஏழைகளை தேடிச் சென்று அரிசி வழங்கிய காவல்துறை ஆய்வாளர் 

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ரேணுகாதேவி. இவர் திருச்சிற்றம்பலம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில், கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இழந்து, வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அடித்தட்டு ஏழை மக்கள் 150 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ 500 மதிப்பிலான தலா 10 கிலோ அரிசி, பிஸ்கட் என ரூ 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் காவல்துறை ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 
 

;