tamilnadu

img

நாச்சியார்கோவில் பகுதியில் புதிய மின் மாற்றி அமைப்பு

கும்பகோணம் பிப்.12- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே நாச்சி யார்கோவில் பகுதியில் முஸ்லிம் தெரு, கொத்த தெரு, புதியகடை வீதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் குறைவாக இருப்பதாகவும் அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்ட நிலையிலும் பொதுமக்கள் மின் வாரியத்திடம் புதிய மின்  மாற்றி அமைத்து தர கோரி க்கை விடுத்தனர்.  அதன் தொடர்ச்சியாக தற்போது நாச்சியார்கோவில் ஊராட்சியில் தேர்வு செய்ய ப்பட்ட ஊராட்சி மன்ற தலை வர் மகேஸ்வரி உமாசங்கரி டமும் கோரிக்கை வைத்தனர்.  அதனடிப்படையில் நாச்சியார் கோவில் புதிய கடைவீதி, முஸ்லிம் தெரு, ஆகிய பகுதிகளில் குடியி ருப்போர்களுக்கும், வர்த்த கர்களுக்கும் பயனளிக்கும் வகையில் 100 கிலோவாட் மின் திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இந்தப் புதிய மின்மாற்றி,  கும்பகோணம் வடக்கு செய ற்பொறியாளர் குணசீலன், உதவி செயற்பொறியாளர் வீரராகவன், நாச்சியார்கோ வில் உதவி மின் பொறியாளர் ரஞ்சித்குமார், (பொறுப்பு) ஊராட்சி மன்றத்தலைவர் உமாசங்கர், அப்பகுதி ஊராட்சி வார்டு உறுப்பினர் சாதிக்பாட்சா மற்றும் ஆகி யோர் முன்னிலையில் பயன்பாட்டிற்கு வந்தது.  இதனால் முஸ்லிம் தெரு  மற்றும் புதிய கடைவீதி, கொத்த தெரு மக்கள் மின்துறை அதிகாரி களுக்கும் ஊழியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவ ருக்கும் நன்றி தெரிவித்தனர்.